Kandha sasti kavacham | கந்த சஷ்டி கவசம் | Murugan Padalgal | Soolamangalam Sisters |
சஷ்டியை நோக்கச் சரவணபவனார்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணியாட
மையல் நடம் செய்யும் மயில்வாகனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
வர வர வேலாயுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலாய் எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரவணபவனார் சடுதியில் வருக
ரகணபவச ரரரர ரரர
ரிகண பவச ரிரிரி ரிரிரி
விணபவ சரவண வீராநமோ நம
நிபவ சரவண நிற நிற நிறென்
வசர ஹணபவ வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னையாளும் இளையோன் கையில்
பன்னிரண்டாயுதம் பாசங்குசமும்
பரந்த விழிகள் பன்னிர ண்டிலங்க
விரைந்தென்னைக் காக்க வேலோன் வருக
ஐயம் கிலியும் அடைவுடன் சௌவும்
உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும்
கிலியும் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென் முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
குண்டலியாம் சிவகுகன் தினம் வருக
ஆறுமுகமும் அணிமுடியாறும்
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலங்கு குண்டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்தினமாலையும்
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திருவயிறுந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப்பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீராவும்
இருதொடை யழகும் இணைமுழந்தாளும்
திருவடியதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொக மொக மொகமொக மொக மொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுகுண டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடு டுடுடுடு டுடுடு
டகு டகு டிகு டிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முரகவேள் முந்து
என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்துதவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா விநோதனென்றும்
உன் திருவடியை உறுதியென்றெண்ணும்
என் தலைவைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க்குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேலிரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவியிரண்டும் வேலவர் காக்க
நாசிகளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத்திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங்கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்தின வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவேலிருதோள் வளம் பெறக்காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதினாறும் பருவேல் காக்க
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடையழகுற செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண் குறியிரண்டும் அயில் வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரலடியினை அருள் வேல் காக்க
கை களிரண்டும் கருணை வேல் காக்க
முன் கையிரண்டும் முரண்வேல் காக்க
பின்கை யிரண்டும் பின்னவள் இரக்க
நாவிற் சரஸ்வதி நற்றுணையாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனை வேல் காக்க
எப்பொழு தும்மெனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வஜ்ரவேல் காக்க
அரையிருள் தன்னில் அணையவேல் காக்க
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கி சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியினில் நோக்க
தாக்க தாக்க தடையறத் தாக்க
பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லல் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழங்கடை முனியும்
கொள்ளிவாற் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரம்மராட்ச தரும்
அடியனைக் கண்டால் அலறிக கலங்கிட
இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலு மிருட்டிரும் எதிர்ப்படு மன்னரும்
கனபூசை கொள்ளும் காளியோட னைவரும்
விட்டாங்காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர்களும்
என் பெயர் சொல்லவும் இடி விழுந்தோடிட
ஆனையடியினில் அரும்பாவைகளும்
பூனை மயிரும் பிள்ளைகளென்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகளுடனே பலகலசத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியப் பாவையும் ஒட்டியச் செருக்கும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதுமஞ் சனமும் ஒருவழிப்போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாள்ளெனைக் கண்டால் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய் விட்டலறி மதிகெட்டோடப்
படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
கட்டுடனங்கம் கதறிடக் கட்டு
கட்டியுருட்டு கால் கை முறியக்
கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர் வடிவேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலதுவாக
விடு விடு வேலை வெருண்டது ஓட
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித்தொடர்ந்தோட
#continued in comment section.
#first part of lyrics in description. தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்துயரங்கம் ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க ஒளிப்புஞ் சுழுக்கும் ஒருதலை நோயும் வாதம் சயித்தியம் வலிப்பு பித்தம் சூலை சயம் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் பிhதி பக்கப்பிளவை படர்தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத்தரணை பருஅரையாப்பும் எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் நில்லாதோட நீயெனக்கு அருள்வாய் ஈரேழுலகமும் எனக்குறவாக ஆணும் பெண்ணும் அனைவரும் எ னக்காய் மண்ணாள் அரசரும் மகிழ்ந்துறவாக உன்னைத் துதிக்க உன்திருநாமம் சரவணபவனே சைலொளிபவனே திரிபுரபவனே திகழொளிபவனே பரிபுரபவனே பவமொழிபவனே அரிதிருமுருகா அமராபதியைக் காத்துத் தேவர்கள் கடும் சிறை விடுத்தாய் கந்தா குகனே கதிர்வேலவனே கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை இடும்பனை அழித்த இனியவேல் முரகா தணிகாசலனே சங்கரன் புதல்வா கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா பழநிப் பதிவாள் பாலகுமரா ஆவினன் குடிவாள் அழகிய வேலா செந்தின்மா மலையுறும் செங்கல் வராயா சமரா புரிவாழ் சண்முகத்தரசே காரார் குழலாள் கலைமகள் நன்றாய் என்னா விருக்க யானுனைப் பாட எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப் பாடினே னாடினேன் பரவசமாக ஆடினே னாடினேன் ஆவினன் பூதியை நேசமுடன் யான் நெற்றியில் அணியப் பாச வினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன்னருளாக அன்புடனிரஷி அன்னமும் சொன்னமும் மெத்த மெத்தாக வேலா யுதனார் சித்தி பெற்றடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைக்குறமகளுடன் வாழ்க வாழ்க வாரணத்துவசம் வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை யடியேன் எத்தனை செயினும் பெற்றவன் நீகுரு பொறுப்பதுன் கடன் பெற்றவள் குறமகள் பெற்றவளாமே பிள்ளையென் றன்பாய்ப் பிரியமளித்து மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித் தஞ்சமென்றடியார் தழைத்திட வருள் செய் கந்தசஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவராயன் பகர்ந்ததை காலையில் மாலையில் கருத்துடனாளும் ஆசாரத்துடன் அங்கம் துலக்கி நேச முடனொரு நினைவதுமாகி கந்தர் சஷ்டி கவச மிதனைச் சிந்தை கலங்காது தியானிப்பவர்கள் ஒருநாள் முப்பத்தாறுரு கொண்டு ஓதியே செபித்து உகந்து நீறணிய அஷ்ட திக்குள்ளோர் அடங்கலும் வசமாய் திசை மன்னர் எண்மர் சேர்ந்தங்கு அருளுவர் மாற்றவ ரல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மையளித்திடும் நவமதன் எனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளுமீரெட்டாய் வாழ்வர் கந்தர் கை வேலாம் கவசத்தடியை வழியாய் காண மெய்யாய் விளங்கும் விழியாற் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லாதவரைப் பொடிப்பொடியாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வசத்துரு சங்காரத்தடி அறிந்தெனதுள்ளம் அஷ்டலெக்சுமிகளில் வீரலட்சுமிக்கு விருந்துணவாக சூரபத்மாவைத் துணித்தகையதனால் இருபத்தேழ்வர்க்கு உவந்தமுதளித்த குருபரன் பழனிக் குன்றினிலிருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி எனைத் தடுத்தாட் கொள் என்றன துள்ளம் மேவிய வடிவுறும் வேலவா போற்றி தேவர்கள் சேனாபதியே போற்றி குற மகள் மன மகிழ் கோவே போற்றி திறமிகு திவ்விய தேகா போற்றி இடும்பாயுதனே இடும்பா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி வெற்றி புனையும் வேலே போற்றி உயர்கிரி கனகசபைக்கோர் அரசே மயில் நடமிடுவோய் மலரடி சரணம் சரணம் சரணம் சரவணபவஓம் சரணம் சரணம் சண்முகா சரணம்..!
Pin this comment on top
Ll
பக்தி பரவசத்துடன் பாடினேன்
Rgrfu5yjtityu4yt
BB nnñbb nnñbb N
எனக்கும் 9 வருடம் குழந்தை இல்லாமல் இருந்தேன்.இப்போது முருகன் அருளால் 2 மாத கர்ப்பமாக இருக்கிறேன் காலையும் மாலையும் கந்த சஷ்டி கவசம் தான் கேட்பேன்.முருகனை போன்று எனக்கு நல்ல படி குழந்தை பிறக்க வேண்டும். முருகனை நம்பி தான் இருக்கிறேன். எனக்கும் மைந்தன் வேண்டும் முருகா.ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏
Valthukal sagothari ❤
நல்ல படி குழந்தை முருகன் பிறப்பான் உங்களுக்கு
Congrats ❤
Sathyam.
Valthukal sister
கேட்பதை தாமதமாகவும்.. தரமானதாகவும் கொடுப்பதில் என் ஐயனை மிஞ்ச ஆளும் உண்டோ?????? இவ்வுலகில்.. 🌎.. 🔱🦚🌟.. அப்பா ❤️🫂😘..
Intha comment padithathum en kankalil neer perukeduththu odukirathu ean ena theriyavillai...
Enakum than
திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும்
❤
என் மகனுக்கு உடல் நிலை சரியாகனும் முருகா அருள்புரியவேண்டும் முருகா போற்றி
🙏🙏🙏🙏
விரைவில் குணமடைய முருகன் அருள்புரிவார்
🙏🙏
விரைவில் சரியாகும் முருகா 🙏🏻
நலம் பெற வேண்டுகிறேன்
நாங்களும் சஷ்டி விரதம் இருந்தோம். முருகன் அருளால் 10 வருடங்களுக்கு பிறகு ஆண் குழந்தை பிறந்துள்ளது 🙏
Unmai ....muruganai nambinal nalathea nadakum🙏..om muruga potri
விரதம் இருக்கும் முறை பற்றி கூறமுடியுமா?
@@myaccont2951 just you can do fasting for the whole day except dinner. Dinner you can eat anything without onion, garlic, drumstick, radish related dishes. Also read "jagamaayai" from thirupugazh. All the best 👍
@@myaccont2951 monly once shasti varum..athu morning to evening irukalam..mudiyathavargal oru poludhu irukalam...Diwali month la oru 6 days shasti days varum athu periya shasti migavum payan tharum.....muyarchi seiungal
என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
இந்தக்குரல் தவி வேறு எந்த.குரலில் கேட்டாலும் பொறுந்தவில்லை. அதுதான்
Very
Very nice voice and we are very happy to hear theslokas thank you.
Ss.nangalum veru voice il ketpathillai.
S
Enakum intha voice than addict intha songa ku..
எனக்கு எம்பெருமான் ஈசனுடைய திருமகன் தமிழ் கடவுள் முருகன் கருணையால் ஆண் குழந்தை பிறந்துள்ளது நன்றி ஆண்டவனே
8 varudathirkku piragu murugan arulal enakum indru kulanthai pirakka pogirathu ...ellarum vendikonga.....iruvarum nalamudan vaazha ❤❤❤
8 வருடங்களுக்கு பிறகு கந்தன் அருளால் எனக்கு பெண் பிள்ளை வரம் கிடைத்துள்ளது முருகன் அருளால் சஷ்டி விரதம் இருக்க எனக்கு மகள் பிறந்து இன்றோடு ஒரு வாரம் ஆகிறது.... ஓம் முருகா போற்றி....
வாழ்த்துக்கள்.
முருகணை nambinor Kaivedapada mattar...
ஓம் முருகா வாழ்த்துக்கள்
முருகப்பெருமானை நினைத்தாலே ,நினைத்தஉடனேஅருள்தரும் வள்ளல் முருகன் .அவனடி மறவாது போற்றுவோம் .
வாழ்த்துக்கள், வாழ்க வளத்துடன்
பிக்ட்ச்சை காரணாக இருந்த கோடிஸ்வரனாக மாற்றிய என் அப்பன் முருகனுக்கு கோடீ கோடி நமஸ்காரம் ..... ஓம் சரவணபவ.
🙏🙏🙏🙏🙏
Illathavangaluku Kuduthu uthavunga anna 🙏 innamum andha murugan arulal nenga nalla irupinga ....❤
ஜிஎஸ்டி கட்டி விட்டீர்களா... கோடி ரூபாய் கிடைத்ததற்கு
கந்தன் பாதம் கனவிலும் காக்கும்.
சூப்பர்
முருகா எங்களுக்கு 7 வருசம் ஆச்சு குழந்தை வரம் தாங்க அப்பா 🙏🙏🙏
முருகன் அருளால் எனக்கு ஆண் குழந்தை பிறந்தது மிகுந்த சந்தோஷம் நன்றி முருகா
அப்பனே முருகா எனக்கு கற்பம் தரித்து உன்னை போல் ஒரு மகன் பிறக்க என்னை ஆசிர்வாதம் செய்யும் 🙏🙏🙏😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏 உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒலியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏 அப்பனே முருகா எனக்கு மடிப்பிச்சை கொடுத்து அருள் புரியுங்கள் முருகா முருகா முருகா சரணம் சரணம் சரணம் சண்முகா சரணம் 🙏🙏🙏
🙏
கடிப்ப முருகனே மகனாக கிடைப்பார்
Nompuinga..gedikgom
கந்தனிடம் செல்லுங்கள். என்ன வேண்டும் சொல்லுங்கள். கேட்டதைக் கொடுப்பார்.
🙏
எத்துனை பேர் பாடினாலும் இவர்கள் குரலில் கேட்பது மிகவும் இனிமை
Hiby
Ayyappa. Bakthl. Songs
R hing tghgg
Only soolamangalam sisters sang version is best others is worst sorry for insult 😔
ஓம் முருகா போற்றி கெட்டவர்கள் அனைவரையும் நல்லவர்களாக மாற்று வாயக
ஓம் முருகா சரணம் என் தந்தைக்கு மலைபோல் வந்த வலியை கடுகலவு குறைத்து சரி செய்த முருகா கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து மயில் ரூபத்தில் எனக்கு துனையாய் நின்ற முருகா சரணம் அய்யனே என் அப்பனே கந்தா வேலவா சண்முகா கருனை கடலே போற்றி போற்றி
குழப்பமான நேரத்தில் கந்தசஷ்டி கவசம் கேட்டு முருகன் அருளுடன் தைரியமும் கிடைத்தது. ஓம் சரவணபவ
300🤣🤣🤣லைக் நான் 🙏
@@ambanimahesh7421 bzvz z zzzz zm nzvznzmznnznzzxmzzzbzzzzzmzm be zzznnxxbbzvmMnvxzzZnzmznzvmnnNzm mn zzvnCbBbbzzvznZxvznmxmbnmXnmnNNnnnZ
உண்மை.. மனசு ஒருவித தெளிவு பெறுகிறது
True
அப்பனே முருகா எனது மகளுக்கு கருதங்கி குழந்தை வரம்கொடுங்கள்
என் மகள் திருமணம் நல்லபடியாக விரைவில் நடத்தி தர எல்லாம் வல்ல முருகப்பெருமானை இந்த பங்குனி உத்திரநாளில் வேண்டிக் கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏💐🌺🌸🌹
ஆறு முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏 ஓம் சரவண பவ🙏
5 years back நான் "மைந்தன் வேண்டும் வரம் மகிழ்ந்து உதவும்" என்று தினமும் சஷ்டி சொன்னேன். என் பெண்ணிற்கு twins. I pray one boy and one girl. By god's grace we are blessed with boy and girl.
கந்த சரணம் முருகா சரணம் வெற்றிபுனையும் வேலே சரணம்
Muruga...
ஓம் முருகா வாழ்த்துக்கள்
உண்மை மனமுருக முருகனை வேண்டினால் நினைத்தது நடக்கும் கேட்டது கிடைக்கும். ஓம் சரவண பவாய நமஹா.
💑வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
எப்பவும் சூலமங்கலம் சகோதரிகள் குரலிலேயே சஷ்டி கவசம் கேட்பதை விரும்புகிறேன் 🙏
ஞஞஞஞஞஞஞஞஞஞஞனஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞ
னநநநநநநந
நநநனனனனனனனனனனநனஞனனனனனனனநனஞனஞனஞநநநநநனநநனநநநநநநநநநநநநநநநநநநநநநநநநனநனனநநநநநநநநநநநநநநநநநஞநநநநநனனநனநநனநனநனநனனநநநநநநநநநநனனநநநனநனநனனநனநனநனநனநனநனநனநனநனநநனநனநனநனநனநனனனஞனன
ஞனனஞஞஞஞனனனனனனனஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞனனஞஞஞனஞனனஞனஞனஞனஞஞனஞனஞனஞனஞனஞனஞனஞனஞனஞனஞனஞனஞனஞஞனனஞனஞனஞனஞனஞஞனனஞனஞனஞனஞஞஞனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனனஞனனனனனஞனஞஞனஞஞனனஞனஞனஞஞஞஞனஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞனஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞஞ
ன
என் அப்பன் முருகா நான் கர்ப்பம் தரித்து உன்னை போல் ஒருவனை பெற்றெடுக்க வேண்டும் என் அப்பன் முருகா போற்றி போற்றி போற்றி ஓம் சரவண பவன் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
கவலைப் படாமல் இருங்க சிஸ்டர் உங்கள் வயிற்றில் முருகன் விரைவில் வந்து தங்குவார். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏
God murugan surely bless you with child.💐💐💐
🙏சரவணன் அருளால் சகலமும் கிடைக்கும்🙏
Ennada daugarukku murugan arulal kulanthai prakka vendum om saragana
❤❤@@svrajendran1157
என் மகளின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சி யாக அமைய முருகா... நீ அருள் புரிவாய்... அப்பா... 🙏🙏🙏🙏🙏🙏
வேறு யாருடைய குரலில் கேட்டாளும் ,இனிமையும் பக்தியும் கிடைப்பதில்லை : முருகா சரணம் சரணம்
Ohm saravanabava ohm saravanabava ohm saravanabava ohm saravanabava ohm saravanabava
உண்மை
d@@sivaradjesivaradje2795
S
Unmai
திருச்செந்தூர் முருகன் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்
வெற்றி வேல் முருகா என் மருமகளும் கர்ப்பம் தரிக்க அருள்புரிவாய் அப்பனே முருகா 🙏🙏🙏🙏🙏🙏🌹🌼
இந்த குரோதி வருடத்தில் இருந்து மிகச்சிறந்த மேம்பட்ட வாழ்க்கையை கொடுக்கும் தமிழ் கடவுள் முருகனுக்கு நன்றி ஓம் சரவணபவ ஓம்
சூலமங்கலம் சகோதரிகளின் இந்த அற்புத பாடலை நேரில் கேட்டேன் ஆண்டு 1964 இடம் திருப்பூர்
கொடுத்து வைத்தவர்
புண்ணியம் செய்தவர்
அய்யா நீங்கள் பாக்யவான் என் அப்பன் முருகனின் அருள் பெற்றவர் 🙏🙏🙏🙏🙏🙏
Luck aana allu
@@kovaisaisaratha 😊
தினம் மாலை வேளையில் கந்தர் ஷஷ்டி படித்து வந்தால் தீரா வினைகளும் தீரும். ஓம் கந்தா போற்றி போற்றி.
Ppppppppp
Wgw,d
Good. I Like This song
நோய் தீரும் கவலை மறையும்... உண்மை....
💯
உன்அருளாள் என்மகனுக்குவேலைகிடைச்சிடுச்சி முருகா திருமணம்நடத்திகுடு என் அப்பனே முருகா
👌
திருச்செந்தூர் பாத யாத்திரை போனேன் முருகன் அருளால் ஆறு வருடம் கழித்து எனக்கு ஆண் குழந்தை பிறந்தது பிறகு ஆறு வருடம் மீண்டும் ஆண் குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகிரது
25 yes back I prayed to him "மைந்தன் வேண்டும் வர மகிழ்ந்து உதவும் ". When I was pregnant. I got my son in karthigai nakshatram. That is Murugan. My lovely beautiful cute child.
kandipaga varuvan velavan ungal illathugu
Amma, what vrata did you do ? Please explain
@@vidyasarathi15 hear this song daily twice
Congratulations
Oh
அப்பா கடளே எனக்கு குழந்தை பாக்கியம் தாப்பா முருகா ஓம் முருகா
கண்டிப்பா உங்களுக்கு முருகனே மகனாக கிடைப்பார்
ஆமாம் மனமுருகி முருகனை வேண்டி கொள்ளுங்கள் முருகன் கை வி மாட்டான். அவனே வந்து பிறப்பான் கவலை வேண்டாம்.
Kandipa kidikum sis .murugan arul
@@Priya-ve6dv my asivadam
முருகனை வேண்டுங்கள் கைவிடமாட்டார்
முருகன் ஆகாத ஓர் காரியம் உண்டா இந்த உலகத்தில் 🙏🙏🙏🙏 நீங்கள் அனைவரும் கேட்டாது முருகன் அருளால் நடக்கும் ஓம் முருகா 🙏❤️
முருகா என்னுடைய மகளுக்கு வயது 32.மற்றும் இரட்டை மகன்களுக்கு வயது 31 திருமணம் விரைவில் நடைபெற அருள்புரிய வேண்டும்
Number
Thiruchendur murugan Kovil ku unga family ellarum poittu vaanga nallathu nadakkum .... Om muruga
எப்பொழுது கேட்டாலும் மனதை உருக்கும் விதமாக இருக்கும் முருகன் கந்தசஷ்டி
குழப்பமான சூழ்நிலை யில் இந்த பாடலைக்கேட்டால் மனதிற்கு அமைதி ஏற்படுகிறது.இதை இனிய குரலில் அருமையாக பாடும் சூலமங்கலம் சகோதரிகளுக்கு மிக்க நன்றி. ...ரவிகுமார் மாணிக்கம்.
Y
முற்றிலும் உண்மை ஓம் சரவண பவ போற்றி
Lord muruga very earlier arrange my sons marriage ohm saravanabava ohm saravanabava ohm saravanabava ohm saravanabava ohm saravanabava
Om muruga muruga saranam
முருகா சரணம்। முருகா சரணம்। முருகா சரணம்। முருகா சரணம்। முருகா சரணம்। முருகா சரணம்। முருகா சரணம்। முருகா சரணம்। முருகா சரணம்।
ஓம் முருகா சரணம்
எனக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிறது இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை எனக்காக அணைவரும் வேண்டிக்கோங்க plsssss🙏🙏🙏🙏🙏 என்னுடைய இந்த மனக்கவலை யாருக்கும் வரக்கூடாது முருகா 😭😭
Sasti viratham start pannunga kandipa conceive ayiduvinga
@@keerthanaa9797 thanks sis❤️
Seekiram sari aagidum Murugan arulal nalladhe nadakkum.
@@sivarajsingaram6497 thanks ☺️
Thiruvallur putlur nirai maadam garbini Amman arul kitta vendugiren
கந்தசஷ்டி கவசம் தினமும் கேட்பதால் மனம் அமைதி அடையும். ஓம் முருகா 🙏🙏🙏.
ESI .asdgdfgghhjkk
தமிழ் கடவுள் முருகனின் கந்தசஷ்டி கவசம் சூலமங்கலம்சிஸ்டர் குரலில் கேட்க மிகவும் இனிமை
கந்தசஷ்டி கவசம்கேட்டால்மனதில்உள்ளகவலைகள்மறந்துவிடும்ஓம்முருகா
OM MURUGAN THUNAI . SUPER!!🙏
எப்பொழுதும் என் நாவில் ஒலிப்பது முருகன் நாமம் தான்.
முருகா என் மகள் சுபஸ்ரீக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் வெற்றி வேல் முருகா போற்றி போற்றி
முருகா கொரனா கிருமியிடம் இருந்து இந்த உலக மக்களை காப்பாற்ற வேண்டும் 🙏🙏🙏🙏
Jk
முருகா நான் தீர்க்க சுமங்கலி யாக இருக்க அருள் செய்வதோடு எனது மகன்களுக்கு குழந்தை செல்வத்தை அளித்து எங்களுக்கு அருள் செய்ய வேண்டும் என இரு கரம் கூப்பி கேட்கும் உனது மகள்.
Muruga enaku kuzhanthai pakiyam kodungal muruga🤰🤰🤰🤰🤰🤰🤰🙏🙏🙏🙏🙏🙏
என் மகன் மருமகளுக்கும் முருகன் அருளால் நிறைந்த ஆயுள் ஆரோக்கியமான ஒரு குழந்தை பிறக்க பிரார்த்தனை செய்கிறேன், ஓம் சரவண பவ! முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
Nallathu nadakum, Murugan tunai
வணக்கம் தங்கள் குறை சீக்கிரம் தீரும். அரச மர அடியில் அமர்ந்த விநாயகரை திங்கள் தோறும் காலை 11 சுற்றி வந்த பின் அருகம்புல் அர்ச்சனை செய்து நெய் விளக்கு 2 ஏற்றி 11 வாரம் தொடரவும். கை மேல் பலன் கிடைக்கும். இது ஓரு எளிய பரிகாரம். 🎉🎉🎉வாழ்துக்கள் .
En
என் மகள் சங்கீத லஷ்மி திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் எல்லா வல்லமுருகன் வள்ளியம்மன் தெய்வானையம்மன் துணை ஓம் முருகா ஹரோ ஹரா
திருப்பரங்குன்றம் முருகா நல்ல வரன் அமைத்து கொடுப்பார்
சூலமங்கலம் சகோதரிகளின் குரலில் ஒரு தெய்வீகம் இருக்கிறது மனம் அமைதி பெறுகிறது, எல்லாம் முருகன் அருள்,ஓம் முருகா சரணம் ஓம் சரவணபவ போற்றி 🌹🌹🌹🙏🙏🙏
Muruga sharanum. 🙏🙏
God
.
Yes I like Sulamangalam sisters; this voice song only my heart always tension free; OHM SARAVANA BHAVA POTRI
Om muruga om saravanapava❤
After 14 years, i blessed with girl baby by grace of God Murugan
🙏முருகா சரணம்🙏
எவ்வளவு மனவேதனையில் இருந்தாலும் இதை கேட்கும் போது மனதில் ஏதோ ஒரு விதத்தில் மனவேதனைக்கு சமாதானம் கிடைப்பதை நான் உணர்கிறேன்
விரைவில் எங்கள் இல்லத்தில் அப்பன் முருகனே குழந்தையாக வந்து பிறக்க வேண்டும்
சூரமங்கலம் சகோதரிகளுக்கு இணை யாருமில்லை எந்த யுகத்திலும் கேட்க்கூடிய இறைவனின் அற்புதமான பாடல் அனைவரும் தினமும் கேட்க்கூடிய பாடல் அனைவரும் கேட்ப்போம். பதிவிட்டவற்கு மிக்க நன்றி ஐயா.
U should say sir/madam because we don't know he/she is he or she so we call them he/she ok... I know u don't understand
Àa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤à
மனதுக்கு அமைதியும் ஆறுதலும் கிடைக்கிறது.
முருகன் அருளால் 12 வருடங்களுக்கு பிறகு எங்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது ...நன்றி முருகா....விரைவில் என் தங்கை தம்பியின் திருமணம் நடைபெற வேண்டுகிறேன்
நம்புங்கள் நல்லதே நடக்கும்!
நல்லது நடக்கும்
எனக்கு தினமும் கந்தசஷ்டி கேட்பது மனதுக்கு நிம்மதி தருகிறது ஓம் முருகா
Enakkum than.bro. recently addict lord murugan
@@enjeevanrajkamal1993you not addicted Lord murugan. Murugan addict you அவர் நினைத்தால் உன்னால் அவரை நினைக்க முடியும் 🕉️ ஒம் சரவண பவ 🕉️🕉️
தெய்வீகத்தன்மை நிறைந்த குரல் எப்போதும் கேட்க கேட்க பக்தி பெருக்கே🙏🙏🙏❤️
அப்பனே முருகா அவதிகள் நீக்கி அருள்பு ரியப்பா அனைவருக்கும், அரோகரா அரோகரா முருகனுக்கு அரோகரா,
முருகா என் தம்பி பூரண குணமாக அருள் புரி என் அம்மா ஆரோக்கியமாக வாழ வேண்டும் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
முருகா எனது கணவர் பார்க்கும் தொழில் அவரிடமே நிறந்தரமாக இருக்க அருள் புரிங்கள் அப்பா எங்கள் குடும்பத்தை காப்பாற்றுங்கள்
கந்த சக்ஷ்டி கவசம் கேட்டால் கவலை தீரும் ஓம் சரவண பவ
மகளின் திருமணத்தை நடத்தி கொடு முருகா.
கந்த சஷ்டி கவசம் கேட்பதை விட தினமும் காலை மாலை இரு வேளையும் நம்மை அந்த முருகக் கடவுளிடம் முழுமையாக ஒப்படைத்து தொடர்ந்து படித்துவந்தால் கேட்பதைத் தருவார் கந்தக் கடவுள்.வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
முருகா சரணம் ஐயா
சூலமங்கலம் சகோதரிகளின் இனிமையான குரலில்,கந்த சஷ்டியை கேட்பவர்களுக்கு முருக கடவுளிடம் மனம் சரணடையும்!ஓம் திருமுருகா திருவடி போற்றி!
மிகவும் அருமையாக உள்ளது
முருகன் அற்புதமான தழிழ் கடவுள் அவரின் அற்புதங்களை அக்கா தங்கை போல இரட்டை சகோரிகளின் இனிமையான உச்சரிப்பு மற்றும் பாடல் வரிகள் முருகரை எங்கள் இல்லத்தில் நிலையாக இருப்பது போன்று எங்கள் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அணைவரும் உணர்கிறோம். ஓம் சரவணபவ இம்மனித குலம் தழைத்தோங்க எங்கெங்கும் அனுதினமும் ஒலிக்க வேண்டிய பாடல்.
,',
ஓம் முருகா அப்பனே முருகா எங்கும் நீ எதிலும் நீயே அப்பா
கடன் தொல்லை தீர வேண்டும் முருகா 🙏
கந்தசஷ்டி விரதம் கடைப்பிடித்து என் மருமகள் கர்ப்பம் அடைந்தார்
இவர்கள் பாடும்போதுதான் மனது ஏதோ செய்கிறது, ஒரு ஈர்ப்பு முருகனிடம் தானா வருகிறத.! தெய்வக் குரல்! எல்லாம் கடவுள் அருள்!
ஓம் கந்தா போற்றி ஓம் சரவண பவன் போற்றி ஓம் முருகா போற்றி
ஓம் முருகா சரணம் உனது திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
தினமும் கந்த சஷ்டி கவசம் கேட்டால் நமக்கு மனது மிகவும்லேசாகிவிடும்கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகராசரவணபவ நமஹ
நன்றி பிரபஞ்ச சக்திக்கு நன்றி நன்றி நன்றி
திருச்செந்தூர் முருகன் நல்ல படியாக இந்த ஊடலஐ நல்ல முறையில் வழி நடத்தி வருங்கால் ❤ வெற்றி வேல் முருகனுக்கு
அப்பனே முருகா அக்கா எனக்கு எந்த தொந்தரவும் தரகூடாது .மனசு மாறி என்னய ஏத்துக்கனும் கடவுளே .இந்த அப்பாவிய ஆசீர்வாதீம் செய்யிங்க
ஒம் முருகா சரணம் உடல் ஆரோகியம் கொடுபாய் முருகா.....
OM Muruga Idal aarogiyam kodu muruga
🙏🙏🙏ஓம் முருகா போற்றி!!! எங்க அப்பாவுக்கு சீக்கிரம் உடம்பு சரி ஆகனும் முருகா....அவருக்கு தீர்க்க ஆயுள் கொடுங்க கடவுளே!! அவர் சீக்கிரம் எழுந்து நடக்கனும் கடவுளே!!! முருகா எங்களுக்கு உன்னோட அருளும், அனுகிரஹமும் வேண்டும்.. எங்களை காப்பாத்து முருகா!! ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏
கந்தன் அருளால் கூடிய விரைவில் நலம்பெற வேண்டுகிறோம்
கந்தன் பாதம் கனவிலும் காக்கும்.
வாழ்க வளமுடன் இறை அருளுடன்
முருகன் அருளால் எனக்கு குழந்தை வரம் கிடைத்துள்ளது.. எனக்கு நல்லபடியாக பிரசவம் ஆகவேண்டும் முருகா.. 🙏
கவலை வேண்டாம் சகோதரி
யாமிருக்க பயமேன்(முருகன்)
உன் அருளால் எனக்குபெண் குழந்தை பிறந்துள்ளது முருகா...🙏
வாழ்க வளமுடன் ❤🎉
கந்த சஷ்டி கவசம் பாட மனதுக்கு நிம்மதி
கேட்பதாக இருந்தால் இந்த இந்த சக்தியை கேக்கநும்
சூலமங்கலம் sistersகுரல் இனிமை கேட்பதற்கு மனதை ஈர்க்கிறது
முருகா நன்றி முருகா சரணம்
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
எல்லா காலத்தையும் இந்த பாடல் கடந்து செல்லும் 🙏🙏🙏🙏
காலை எழுந்தவுடன் இந்த பாடலை கேட்டால் தான் அந்த நாள் இனிய நாளாக அமையும்.
முருகா என்னுடைய வேண்டுதல் நிறைவேற வேண்டுகிறேன் அய்யா 🙏
அன்பான அம்மா அவர்களே ,வணங்கும் உங்கள் பிள்ளைகள் ,நல்ல ஆரோக்கியமாகவும் ,பக்தி பெறும் ஆசி வழங்கி, தமிழ் கடவுள் ஸ்ரீ முருகன் துணை இருக்க ஆற்றிய பணிகளுக்கு என்றென்றும் வாழையடி வாழையாக வணங்கும்
P
Enaku positive aganum nu this song ketten....now positive for 10yr back...baby good growth varanum muruga....🙏🙏
After 7 years with murugan blessing we have been blessed with baby boy.
En kastangal anaithum un arulal theera vendum 🙏
எங்க அப்பா முருகா போற்றி போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா எங்க குடும்ப த்திற்கு நல் வழி காட்டுவாய் முருகா ஓம் சரவணபவ
பாடலை கேட்கும்போதெல்லாம் மன அமைதி கிடைக்கின்றது...
O
முருகா முருகா என்மகளுக்குவிநோவுக்குசுகப்பிரசவம்ஆகஅருள்புரியவேண்டும். மனம்இரங்கிஅருள்புரியவேண்டும்அப்பாமுருகாமுருகா
Vetri punaiyum velle potri🙏
O.M முருக சரணம் என் வேண்டுதல்களை நிறைவேற்றவேண்டும்
அப்பா முருகா சரணம் சரணம் என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் அப்பா முருகா 🙏❤️❤️🙏
ஓம் முருகா
Muruga muruga enoda ela prachanaiyum sariyaganum
ஓம் முருகா மனம் பயம் நீங்கி கல்யாணம் வரம் முடித்து கொடுப்ப இறைவா கந்த சஷ்டி கவசம் துணை 🙏🙏🙏🙏🙏🙏
செந்தூர் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
பழநி மலை முருகனுக்கு அரோகரா 🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏
😮❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😮😮